புதன், 28 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 19

 லவ்லி பாலகிருஷ்ணன்.

காலை 9-00 மணிமுதல் சிறுக சிறுக அனைத்து பகுதிகளில் இருந்தும் தையற்கலைஞர்கள் வரத்தொடங்கி விட்டனர். அய்யா அவர்களும் காலை 10-00 மணிக்கெல்லாம் மேடைக்கு வந்து விட்டார்.

ஒவ்வொரு பகுதியில் வந்தவர்கள் பெயர் குறித்து கொண்டு யார் பேசுவார் என்பதையும் கேட்டு ஒவ்வொரு பகுதியாக பேச அழைத்தேன். பேசுவதற்கு முன்பாக அனைவரிடமும் சங்கம் தேவையா இல்லையா எப்படி அமைக்கலாம் என்பதை மட்டுமே பேச சொன்னேன். அனைவரின் பேச்சையும் பெயருடன் அய்யா அவர்கள் குறிப்பெடுத்தார். 500 பேருக்கும் மேல் வந்திருந்தனர். மகளிர் 200 பேருக்கு மேல் இருக்கும்.

அனைவரும் சங்கம் அவசியம் தேவை என்றுதான் பேசினார்கள். இறுதியில் அய்யா அவர்களின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டை மிகவும் பாராட்டினார். மாவட்டத்திற்கு 6 அமைப்பாளர்களை அய்யா அவர்கள் நியமனம் செய்தார். எனக்கு பதவி முக்கியமல்ல சங்கம் அமைத்தால் மகிழ்வேன் உழைப்பை தருவேன் என் பெயரை சேர்க்க வேண்டாம் என்று முன்கூட்டிய சொல்லி விட்டேன்.  அமைப்பாளர்கள் அனைவரும் விரைவில் மாவட்ட நிர்வாகம் அமைக்கவும் சொன்னார்.

அடுத்த நிகழ்வுகள் விரைவில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக