திங்கள், 26 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 17

 லவ்லி பாலகிருஷ்ணன்.

முக்கியஸ்தர்கள் அனைவரும் சேர்ந்து எப்படி நிகழ்ச்சி நடத்துவது என்னென்ன செலவுகள் உள்ளது என்று கணக்கு பார்த்தோம். அதை எப்படி வசூல் செய்வது என்று பார்த்தோம். அனைத்தையும் செய்து விடலாம் என்று எனக்கு நம்பிக்கை தந்தார்கள்.

20 தினங்கள் மட்டுமே உள்ளது. 

பேசியபடி நானும் திருவாளர்கள் ஏ.வி.முத்துவேலன், ஸ்டாண்டர்ட் ராஜமாணிக்கம், கிஷோர் ராஜமாணிக்கம், லோகநாதன், தமிழ், மாது, தங்கவேல், வி.விஜயகுமார் ஆகியோரும் 3 அல்லது 4 பைக்கில் அவரவர் பைக்கிற்கு அவரவர்கள் பெட்ரோல் போட்டு காலையில் கிளம்பி இரவு வரை சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 15 தினங்கள் நோட்டீஸ் விநியோகம் செய்து சங்கத்தின் தேவை குறித்து விளக்கி அழைத்தோம். இடையிடையே இரண்டு மூன்று நபர்கள் வசூலுக்கு சென்று விடுவார்கள். நாளூம் நெருங்க நெருங்க கூட்டம் வருமா என்று சந்தேகமும் வந்தது. ஆனாலும் நம்பிக்கையுடன் செயல்பட்டோம். அய்யா டீ வீ எஸ் மணி அவர்களும் இடையிடையே தொலைபேசி மூலம் விசாரித்தது தெம்பு கொடுத்தது.

நாளும் நெருங்கியது நிகழ்வுகள் தொடரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக