செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 5

 லவ்லி பாலகிருஷ்ணன்

1985 என்று நினைக்கிறேன் புதுக்கோட்டை மாவட்ட சங்கத்தின் தேர்தலுக்கு தேர்தல் அதிகாரிகளாக திரு ஜீ.என். ராவ் அவர்களும் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களும் வந்திருந்தார்கள் என்னை பார்வையாளராக அழைத்திருந்தனர். நாங்கள் சந்தித்து கொண்டோம் அறிமுகம் செய்து பேசும் அளவுக்கு நேரம் கிடைக்கவில்லை. 

சென்னையில் சந்திக்கும் போது அந்த சந்திப்பை நினைவு படுத்தினேன். அவருக்கும் நினைவிருந்தது.

சங்கத்தை பற்றி பேசினோம். சங்கத்தில் பதவியில் இல்லாவிட்டாலும் திரு சுதாகரன் அவர்கள் தகவல் பேரில் செல்லும் கடைகளில் சங்கத்தின் கூட்டம் பற்றிய தகவல்கள் சொல்வேன். இந்த விஷயத்தை அய்யா டீ வீ எஸ் மணி அவர்களிடம் பலர் சொல்லி இருந்துள்ளனர். என்னை பாராட்டி சங்கத்தின் வளர்ச்சிக்கு உங்கள் பங்கு வேண்டும் என்றார். 

நான் இதுவரை ( 1994 வரை ) எனது தொழிலின் வளர்ச்சிக்காக யோசித்தேன் தற்போது ஆண்டவன் புண்ணியத்தாலும் தையற்கலைஞர்கள் ஆதரவிலும் நன்றாக வளர்ந்துள்ளேன். சங்கத்திற்கு என்ன செய்ய வேண்டும் கிளை இல்லாத இடத்தில் கிளை அமைக்கவும் மாவட்ட சங்கம் இல்லாத மாவட்டத்தில் மாவட்ட சங்கம் அமைக்கவும் பாடுபடுவேன் என்று கூறினேன். தாங்களும் எனக்கு எங்கு என்ன வேலை என்று தகவல் தாருங்கள் என்று கூறினேன். 1995ல் சேலம் மாவட்டத்தில் அய்யா அவர்களும் நானும் இணைந்து செயல்பட்டது அடுத்த மலரும் நினைவுகளில் அதற்கு முன் திரு சுதாகரன் அவர்களின் தொடர்பில் பற்றிய தகவல்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக