செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 9

 லவ்லி பாலகிருஷ்ணன்

தருமபுரி என்றவுடன் நினைவுக்கு வரும் சம்பவம் திரு ஜி.என். ராவ், அவர்களும் திரு டீ வீ எஸ் மணி அவர்களும் 92ல் சங்கம் ஆரம்பிக்கவும் 93ல் மாநில மாநாடு நடத்த முடிவெடுத்ததும் தர்மபுரி மாவட்டம் இண்டூர் திரு சாந்தம் அவர்கள் அழைப்பின் பேரில் இண்டூர் சென்றனர். அந்த காலத்தில் பாத்ரூம் வசதிகள் கிடையாது. கண்மாய்கரை தான். காலையில் குளிப்பதற்கு கோயிலில் கற்களை வைத்து அடுப்பில் சுடுதண்ணீர் வைத்து குளிக்க செய்தனர்.

சங்கம் புதிது சென்னையில் இருந்து நிர்வாகிகள் வந்தது தெரிந்த தையற்கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் திரளாக கூடினார்கள்.

மக்களின் எழுச்சி பார்த்த திரு ஜி.என். ராவ்,டீ வீ எஸ் மணி ஆகியோர் உற்சாகத்துடன் சென்னை வந்து சங்கத்தை வளர்க்க அடுத்த முயற்சியில் இறங்கினார்கள்.

சங்கம் இந்த அளவுக்கு வளர இண்டூர் கிளையும் திரு சாந்தம் அவர்களும் தான் காரணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக