செவ்வாய், 20 செப்டம்பர், 2022

நலவாரியத்தில் இணைவோம் பயண்கள் பெறுவோம்

 அன்பு தையற்கலைஞர்களே வணக்கம் நமது சங்கத்தின் நிறுவனர் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களின் அயராத உழைப்பால் அவரது அன்பு கட்டளைக்கு உட்பட்டு அனைத்து நிகழ்ச்சிகள் மாநாடுகளில் கலந்து கொண்டு நமது பலத்தை காண்பித்து 2000 ஆம் ஆண்டு நலவாரியம் பெற்றோம். 

இப்போது பலர் பயண்கள் பெற்று வருகின்றனர். நமது திருப்பத்தூர் மாவட்ட தலைவர் திரு எஸ். நீஜீர் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைத்துள்ளது. இதுபோல் பலர் பயண் பெறுகின்றனர். அய்யா டீ வீ எஸ் மணி அவர்களின் கனவு நனவாகின்றது. 

இது மேலும் நீடிக்கவும் மேலும் அதிக பயண்கள் பெறவும் தனி நலவாரியம் தான் தேவை. அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தையற்கலைஞர்களும் புரோக்கர் சங்கங்கள் கட்சி தொழிற்சங்கம் மூலம் இணையாமல் நமக்கென செயல்படும் நமது தொழிற்சங்கம் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் TTKTMS பதிவு எண் 2682/CNI மூலம் மட்டுமே இணைவதன் மூலம் நமக்கு அதிக பலம் கிடைக்கும் நாமும் நமக்கு தனிநலவாரியம் கேட்கலாம். இனி அனைவரும் இந்த முயற்சியில் பாடுபடுவோம் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களின் கனவை முழுவதும் நிறைவேற்றுவோம்!

அன்புடன்

லவ்லி பாலகிருஷ்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக