செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 8

 லவ்லி பாலகிருஷ்ணன்.

மதுரையில் நடைபெற்ற மாநில மாநாட்டிற்கு பின் அங்கங்கே சில கிளைகளிலும் மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடைபெற்றன.

நான் சில கூட்டங்களில் பார்வையாளராக கலந்து கொண்டேன்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் மாவட்ட அளவில் மாநாடு மற்றும் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. திரு ஜி.என். ராவ் அவர்களும் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களும் கலந்து கொண்டார்கள். நகர சங்கத்தின் அழைப்பின் பேரில் நானும் கலந்து கொண்டேன். மாநாடு மிக சிறப்பாக இருந்தது. மேடையில் திரு ஜி.என். ராவ், திரு டீ வீ எஸ் மணி ஆகியோர் பேச்சு வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது. 88க்குப்பின் சங்கத்தின் செயல்பாடுகள் குறைந்தன.89 அல்லது 90ல் திருச்சி சுப்ரமணியபுரம் பகுதி சங்கம் திரு கணேசன் அவர்கள் தலைமையில் சர்ச் அருகில் பள்ளிக்கூட வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது. பார்வையாளராக கலந்து கொண்டேன.

அதன் பின்னர் 93 சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை. 94ல் உரத்த சிந்தனை கூட்டத்தில் அய்யா அவர்களை சந்தித்து பின்னர் தர்மபுரி மகளிர் மாநாட்டிற்கு பின் சேலம் வந்தார் அய்யா டீ வீ எஸ் மணி. அங்கு நகர சங்கம், மாவட்ட சங்கம் என்று இரண்டு சங்கங்கள் இருந்தன.

தலைமை சங்கத்தில் இணையாமல் தனியாக இருந்தன. ஆகவே நிர்வாகிகளை சந்தித்து பேச 94ம் ஆண்டு கடைசியில் சேலம் வந்தார். எனக்கு தகவல் தந்தார். மற்ற தகவல்கள் நினைவுகளாக மலரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக