புதன், 28 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 18

 லவ்லி பாலகிருஷ்ணன்.

சேலத்தில் பொன்னம்மாபேட்டையில் பெரியவர் கொடி தைக்கிறார் என்றவுடன் அவரை சந்தித்து நமது கொடி என்றவுடன் ஆர்வமாக குறைந்த விலையில் சிம்பலுடன் கொடிகள் தயாரித்து தந்தார். ஜாகிர் அம்மாபாளையம் தையற்கலைஞர்களும் 6அடிக்கு 30அடி‌ அளவில் சில கொடிகள் தைத்தனர். மதியம் 300 பேருக்கு உணவு சொல்லி தேவைப்பட்டால் மேலும் உணவு தயாரிக்கவும் ஆயுத்தமானோம்.

முதல்நாள் இரவு மண்டபத்திற்கு அருகிலும் இரும்பாலை ரோட்டில் நடுவில் சென்டர் மீடியேட்டரில் விளக்கு கம்பங்களுக்கு இடையிடையே கொடிகள் கட்டினோம். நிகழ்ச்சியை மாநாடு போன்றே ஏற்பாடு செய்து விட்டனர்.

காலையில் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களும் மற்றும் நிர்வாகிகளும் நாமக்கல் மாவட்ட செயலாளர் திரு சாமுவேல் அவர்களும் வந்து பார்த்து வியந்து விட்டார்கள். 

நாங்கள் கூட்டம் எப்படி சேரும் என்ற சிந்தனையிலேயே இருந்தோம்.

கூட்டம் எப்படி நடந்தது என்பது மலரும் விரைவில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக