செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 4

லவ்லி பாலகிருஷ்ணன்
70ல் இருந்து 96 வரை லேபிள் தொழிலுடன் பத்திரிகைகளுக்கு துணுக்கு எழுதும் பணியும் துணுக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் துணை தலைவர் பதவியிலும் இருந்தேன்.
ஓ! பல்சுவை மாத இதழ் நண்பர்களுடன் ஆரம்பித்து அதில் துணை ஆசிரியராகவும் இருந்தேன்.
பத்திரிகை எங்கள் லவ்லி பிரிண்டர்ஸ்ல் அச்சாகி வெளி வந்தது. உலக தையற்கலைஞன் மாத இதழும் கிட்டத்தட்ட ஒரே சமயம் வெளியானது. உரத்த சிந்தனை அமைப்பின் மூலம் துணுக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு திசை முத்து அவர்களுக்கு 1994ல் விருது வழங்கும் விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு அய்யா டீ வீ எஸ் மணி அவர்களும் வந்திருந்தார். அனைவருக்கும் அந்த மாதத்தின் பத்திரிகை கொடுத்தார். நான் அய்யா அவர்களிடம் ஓ! மாத இதழ் லவ்லி பாலகிருஷ்ணன் என்று அறிமுகப்படுத்தி கொண்டேன். உடனே லீனா லேபிள்ஸ் தானே என்று புன்னகையுடன் கேட்டார். அதன்பின் நாளை என்னை வந்து சந்திக்க முடியுமா? நிறைய பேச வேண்டும் என்றார். அதேபோல் மறுதினம் மயிலாப்பூர் கடையில் சந்தித்தேன்.
விபரம் தொடரும்.
70க்கு பின் திரு சுதாகரன் அவர்களின் தொடர்பும் மலரும் நினைவுகளாக தொடரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக