செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 14

 லவ்லி பாலகிருஷ்ணன்.

அதன் பிறகு மறுநாள் அம்மாப்பேட்டை பகுதியில் திருவாளர்கள் அண்ணாமலை, முத்து, துரை, சாமி மற்றும் தையற்கலைஞர்களையும் பட்டைக்கோயில் பகுதியில் வி.எஸ். ரவி, முனுசாமி, தியாகராஜன், மோகன், ஜோதி, சுப்ரமணி, வரதராஜன், இஸ்லாமிய டெய்லர் பெயர் நினைவுக்கு வரவில்லை மற்றும் தையற்கலைஞர்களை சந்தித்து பேசினேன் அவர்களும் மாநில சங்கத்துடன் இணைத்து கிளைகள் அமைத்து தரவேண்டும் என்று கூறினார்கள். 

நான் உறுதி அளித்ததும் இரண்டு பகுதிகளும் ஒரு வேன் ஏற்பாடு செய்துவிட்டனர்.

மதுரை மாநில மாநாட்டிற்கு இரண்டு வேன்களில் மூன்று பகுதிகளிலிருந்து வந்தார்கள்.

அன்று காலையில் கணேஷ் தியேட்டர் அருகில் மண்டபத்தில் மாநில பொதுக்குழு சேலத்தில் இருந்து வந்தவர்கள் மேடையில் பொதுச் செயலாளர் திரு டீ வீ எஸ் மணி அவர்களிடம் மனு ஒன்றை கொடுத்தார்கள். சேலத்தில் இருந்து மூன்று கிளைகள் வந்ததை கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

தனது உரையின் போது மனு படித்து பதில் சொல்வதாக அறிவித்தார்.

என்ன எனும் விபரம் அடுத்த நினைவுகளில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக