செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 13

 மாநாட்டிற்கு நோட்டீஸ் விநியோகம் செய்ததில் ஜாகிர் அம்மாபாளையம் ஸ்டாண்டர்ட் ராஜமாணிக்கம் அவர்கள் எங்கள் பகுதியில் இருந்து மாநாட்டிற்கு வருகிறோம். தலைமை சங்கத்தின் உறுப்பினர் அட்டைகள் வாங்கி தந்து எங்களுக்கு கிளை அமைத்து தரவேண்டும் என்று கூறினார்.

மாநாட்டிற்கு பின் அவசியம் ஏற்பாடு செய்கிறேன். மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் என்றும் சொன்னேன். 

உடனே திருவாளர்கள் A.V.முத்துவேலன், பொன்னுச்சாமி, மாது, தங்கவேல்,V.விஜயகுமார்,,கிஷோர் ராஜமாணிக்கம், தமிழ், லோகனாதன் ஆகியோரை திரு ஸ்டான்டர்ட் ராஜமாணிக்கம் அவர்கள் அழைத்து வந்தார்.

அனைவரிடமும் கிளை அமைக்கவும் உறுப்பினர் அட்டைகள் பெற்று தரவும் உறுதி அளித்ததுடன் திரு டீ வீ எஸ் மணி அவர்களிடம் ஃபோன் மூலம் பேச வைத்தேன். அனைவரையும் அய்யா அவர்கள் மாநாட்டிற்கு அழைத்தார்.

உற்சாகமான அனைவரும் 20 உறுப்பினர்களுடன் வேன் மூலம் மதுரை மாநாட்டிற்கு தயாரானார்கள். அடுத்து பட்டைகோயில் அம்மாப்பேட்டை பகுதியின் தகவல்கள் மலரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக