திங்கள், 26 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 15

 லவ்லி பாலகிருஷ்ணன்.

பொதுக்குழுவில் அய்யா டீ வீ எஸ் மணி அவர்கள் பேசும் போது சேலத்தில் இருந்து மூன்று கிளைகள் வந்ததற்கு நன்றி என்றும் லவ்லி பாலகிருஷ்ணன் அவர்களை பாராட்டுவதாகவும் சொல்லி சேலத்தில் கிளைகள் அமைக்க வேண்டும் என்று மனு தந்துள்ளார்கள் சேலம் மாவட்டம் அமைக்கும் பொறுப்பு லவ்லி பாலகிருஷ்ணன் வசம் தந்துள்ளேன். அவர் மூலம் உறுப்பினர் அட்டைகள்பெற்று கிளைகள் அமைத்து மாவட்ட சங்கம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

அதன் பின்னர் மாலை 4-00 மணிக்கு தெப்பக்குளம் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலமாசி வீதி வடக்குமாசிவீதி ஆலாலவிநாயகர் கோயில் அருகில் அமைக்கப்பட்ட மாநாட்டு பந்தலை அடைந்தது. 

அரசியல் கட்சிகள் கூட்டத்தை விட நமது கூட்டம் அதிகமாக இருந்தது குறிப்பிடத தக்கது.

மாநாடு முடிந்ததும் இரண்டு தினத்தில் சேலம் வருவதாக சொல்லி அனுப்பி இத்தகவலை பொதுச் செயலாளர் அவர்களிடமும் தெரிவித்தேன்.

சேலத்தில் நடந்த நினைவுகள் தொடரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக