திங்கள், 26 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 16

 லவ்லி பாலகிருஷ்ணன்.

மதுரை மாநில மாநாட்டிற்கு பின்னர் 2நாளில் சேலம் சென்று ஜாகிர் அம்மாபாளையம் நிர்வாகிகளை சந்தித்தேன். ஸ்டாண்டர்ட் திரு ராஜமாணிக்கம் அவர்கள் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த வாரத்தில் 50 உறுப்பினர் சேர்க்கிறோம் என்றார்கள் சென்னையில் இருந்து உறுப்பினர் அட்டைகள் வந்ததும் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களிடம் தேதி வாங்கி மண்டபத்தில் மாவட்ட அளவில் கூட்டம் நடத்துவது என்றார்கள்.

5தினத்தில் 50 உறுப்பினர் சேர்த்தனர். நான் வாங்கிக்கொண்டு நேரில் சென்று பொதுச்செயலாளர் அவர்களை சந்தித்து கார்டு தயார் செய்து தேதியும் வாங்கி சேலம் திரும்பினேன். அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி.

ஜாகிர் அம்மாபாளையம் இரும்பாலை ரோடு வேலாயுத கவுண்டர் திருமண மண்டபம் புக்கிங் செய்து மாவட்ட ஆலோசனை கூட்டம் நோட்டீஸ் பிரிண்டிங் செய்து முக்கியஸ்தர்களுடன் சென்னை நேரில் சென்று அய்யா டீ வீ எஸ் மணி அவர்களுக்கு அழைப்பு தந்து சேலம் வந்ததும் நிகழ்ச்சி திட்டம் தீட்டினோம்.

திட்டம் மலரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக