செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 11

 அய்யா டீ வீ எஸ் மணி அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கும் போக்குவரத்து செலவு ரூம் வாடகை தந்தால்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று ஒரு குரூப்பில் ஒரு அன்பர் பதிவிட்டிருந்தார். எனக்கு தெரிந்து அப்படி பணம் வாங்காமல் தான் வந்துள்ளார்.

அன்றிருந்த உதவியாளர்கள் ஒரே நாளில் இரண்டு இடத்தில் தேதி கொடுத்து அதனால் சில இடங்களில் வர முடியாமல் போனதும் உண்டு.

மதுரை சூப்பர் டெய்லர் திருமண மண்டபம் காலையில் திறப்பு விழா மதியம் தஞ்சாவூர் இளங்கோவன் இல்ல திருமணம். இரவு சென்னை மூலக்கரை பத்மநாபன் திருமண வரவேற்பு. உதவியாளர்கள் மூன்று இடங்களிலும் தேதி கொடுத்து அவர்கள் துணைக்கு வரவில்லை நான் துணைக்கு சென்றேன். எவ்வளவு சிரமம் ஆகியிருக்கும் யாரிடமும் போக்கு வரத்து பணம் வாங்காமல் தண்ணீர் பாட்டில் பிஸ்கட் பாக்கெட் மட்டுமே. சரியாக உணவு அருந்தவும் நேரமில்லை. சென்னையில மூலக்கடை பத்மநாபன் திருமண வரவேற்பில் கலந்து கொள்ளும்போது இரவு 10-30 மணி.

அதேபோல் கொரடாச்சேரி காளிதாஸ் தம்பி கண்ணதாசன் திருமணம் காலையில் அதே நாள் காலையில் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தேதி கொடுக்கப்பட்டது. முதல்நாள் தான் உதவியாளர்கள் சொல்லியுள்ளார்கள். அய்யா அவர்கள் என்னை திருமணத்திற்கு வரவேண்டாம் தர்மபுரி செல்லுங்கள் பொதுக்குழு மாலையில் மாற்றுங்கள் என்று சொன்னார். நானும் நிர்வாகிகளை நேரில் சந்தித்து மாற்றம் செய்து அய்யா திருவாரூர் கொரடாச்சேரி திருமணம் முடிந்து உணவருந்தாமல் 4 பேருந்துகள் மாறி தர்மபுரி வரும் சமயம் மாலை 7-00 மணி சாப்பிடச் சொல்லியும் சாப்பிடாமல் மீட்டிங் முடிந்து தான் சாப்பிட்டார். எவ்வளவு கஷ்டம் நினைத்து பாருங்கள். யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. அதேபோல் திரு சாந்தம் அவர்களின் விஷயத்திலும் நடந்திருக்கும். சாந்தம் அவர்களைப் பற்றி உலக தையற்கலைஞன் மாத இதழில் பலமுறை பெருமை பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக