ஞாயிறு, 2 அக்டோபர், 2022

மலரும் நினைவுகள்! 21

 லவ்லி பாலகிருஷ்ணன்.

சேலம் செவ்வாய் பேட்டை கிளையில் நிர்வாகிகள் தேர்வு செய்து தலைமை சங்கத்தில் 26-9-1999 அன்று நிகழ்ச்சிக்கு ஒப்புதல் பெற்று செவ்வாய் பேட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபம் புக்கிங் செய்து நோட்டீஸ் பிரிண்டிங் செய்ததும் பொதுச் செயலாளர் அய்யா திரு டீ வீ எஸ் மணி அவர்களின் வருகை மிக விமரிசையாக செய்ய நினைத்த செவ்வாய் பேட்டை நிர்வாகிகள் திருவாளர்கள் எஸ். தேவராஜ், P.செல்வராஜ்,  நாராயணசாமி, A.சந்திரன், P.சண்முகம் ஆகியோருடன் நானும்  ஜாகிர் அம்மாபாளையம் போன்று மாவட்டம் முழுவதும் சுற்றி அழைப்பு தந்தோம். 

நிகழ்ச்சி முதல்நாள் சென்னையியிலிந்து அய்யா அவர்கள் பேருந்து மூலம் சேலம் பேருந்து நிலையம் வருவதற்குள் உடைகள் செவ்வாய் பேட்டை கிளை உறுப்பினர்கள் அடையாள அட்டைகள் இருந்த சூட்கேஸ் திருடப்பட்டு விட்டது.

காலையில் நிகழ்ச்சிக்கு அய்யா அவர்கள் அணிந்து கொள்ள ஆடைகள் இல்லை என்று வருந்தும் போது தையற்கலைஞர்களால் எதுவும் முடியும் எனும் சம்பவம் நடந்தது. என்னை என்பது அடுத்த நினைவுகளில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக