லவ்லி பாலகிருஷ்ணன்.
எனக்கு தெரிந்த பைண்டிங் கம்பெனியில் நானே அருகில் இருந்து அட்டைப்பெட்டிகள் தயார் செய்து டெலிவரி செய்தேன். அட்டை பெட்டிகளை பார்த்த திரு சுதாகரன் அவர்கள் கோட் தயாரிக்கும் மற்ற கடைகளுக்கும் ஃபோன் செய்து அட்டைப்பெட்டிகள் சிறப்பாக உள்ளது ஆர்டர் தாருங்கள் என்று சொல்லி என்னை அந்த கடைகளுக்கும் அனுப்பி வைத்தார். அவர்களும் அட்டைபெட்டிகளை பார்த்து ஆர்டர் தந்தார்கள்.
1970ல் எனக்கு முழுநேர பணியாக மாறிவிட்டது.
அதற்குள் மெட்டீரியல் கடைகாரர்களும் என்னைப் போன்றே பட்டன்கள் வரவழைத்து விற்பனை செய்ய ஆரம்பித்ததால் லேபிள் தொழிலை முழுநேர பணியாக மாற்றியதுடன் அருகில் உள்ள ஊர்களிலும் ஆர்டர் எடுக்க ஆரம்பித்தேன்.
எனது நினைவுகள் தொடரும்........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக